விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீரமூர் கிராமத்தில் சின்னமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பூ கட்டும் தொழில் செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் நண்பர்களுடன் இயற்கை உபாதை கழிப்பதற்காக அப்பகுதியில் இருக்கும் பெரிய ஏரிக்கு சின்னமணி சென்றார். அங்கே இருள் சூழ்ந்து காணப்பட்டதால் எதிர்பாராதவிதமாக சின்னமணி ஏரிக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினார்.

இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு சின்ன மணியின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.