மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் பிரச்சாரம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. இந்த தேர்தலில் பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று அக்கட்சியினர் தொடர்ந்து கூறி வருகிறார்கள். ஆனால் இதற்கு வாய்ப்பே இல்லை என்று அரசியல் விமர்சகர்களும் ,நடுநிலையாளர்களும் கூறி வருகிறார்கள்.  இந்த நிலையில் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய் குரைஷி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுல பதிவு அரசியலும், கிண்டலும் கலந்ததாக இடம் பெற்றுள்ளது.

அதாவது தற்போது 400+ என்று பேசி வருகிறார்கள். மே மாத இறுதிவரை காத்திருங்கள் அப்பொழுது 250 ஆக குறைந்துவிடும். அதுவே ஜூன் முதல் வாரத்தில் 175 முதல் 200 என்று அளவிற்கு வந்துவிடும். நான் பேசுவது அல்போன்சா மாம்பழங்கள் விலையை பற்றி தான் ஒவ்வொரு தகவலிலும் அரசியலை தேடாதீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.