பொதுவாக காட்டுப்பன்றிகள் மற்றும் அவற்றின் குட்டிகள், காட்டின் வேட்டையாடும் விலங்குகளுக்கு எளிய இலக்குகளாய் இருப்பது போலவே நம்பப்படுகின்றன. ஆனால் சமீபத்தில் சமூக ஊடகங்களில் வெளியான ஒரு வீடியோ அந்த நம்பிக்கையை முற்றிலுமாக மாற்றி, காட்டுப்பன்றியின் அதிரடியான தைரியத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

இவ்வைரல் வீடியோவை @latestkruger என்ற இன்ஸ்டாகிராம் கணக்கு பகிர்ந்துள்ளது. வீடியோவில் மூன்று சிறுத்தைகள் ஒரு குட்டி பன்றியை வேட்டையாட  முன்னோக்கிச் செல்லும்போது, அந்த குட்டிபன்றி எதிர்ப்பு காட்டி அவற்றை திருப்பி ஓட வைத்தது.

 

சிறுத்தை முன்னேறுமா என்று தோன்றும்போது, குட்டிபன்றி முழு பலத்துடன் அந்த  சிறுத்தைகளை பதற்றமூட்டும் நிலையில் துரத்த ஆரம்பிக்கிறது. வீடியோவில், “இன்று நான் வேட்டையாளர்” என்று சொல்லும்  அளவுக்கு அதன் செயல்பாடு பதிவாகுகிறது.

இந்த வீடியோ  பகிரப்பட்ட சில மணி நேரத்திலேயே மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகள் மற்றும் 12 ஆயிரத்துக்கும் மேலான லைக்குகள் பெற்றுள்ளது. நெட்டிசன்கள் இதற்கு கடுமையான விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர்.  “சிறுத்தைகளுக்கு இதை விட அவமானம் என்ன இருக்க முடியும்?” என்றும் ஒன்று, “இந்த சிறிய பன்றி ‘முதலாளி’யாக மாறியது” என்றும் மற்றொரு பயனர் கருத்து தெரிவித்துள்ளார்.