இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏசி வேலை செய்யாததால் பயணிகளுக்கு டிஷ்யூ பேப்பரை ஊழியர்கள் வழங்கியுள்ளனர். பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் அமரீந்தர் சிங் ராஜா, சண்டிகரில் இருந்து ஜெய்ப்பூருக்கு இண்டிகோ விமானத்தில் பயணித்தபோது ஏற்பட்ட துயரத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். ஏர் கண்டிஷனிங் இல்லாமல் விமானத்தின் உள்ளே அமர்ந்திருக்கும் பயணிகளுக்கு 90 நிமிடங்கள் தலைவலியாக மாறியதாக கூறியுள்ளார்.

வியர்வையை துடைக்க டிஷ்யூ பேப்பரை வழங்கினார்கள் என்றும், இப்படி ஒரு நிலை இனி ஏற்படக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார். டிஷ்யூ பேப்பர்களால் பயணிகள் தங்களை விசிறிக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.