கர்நாடக மாநிலம் துமாக்கூர் என்ற மாவட்டத்தில் 15 வயது சிறுவன் பீமா சங்கர் என்பவர் பள்ளிகளுக்கு இடையேயான ரீலே பந்தயத்தில் கலந்து கொண்டார். அந்தப் பந்தயப் போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்த இவருக்கு சில நிமிடங்களில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் இருந்தாலும் அவர் உயிர் பிரிந்தது. சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவன் மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. 15 வயது சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.