கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே நங்கன்விளை  பகுதியை சேர்ந்த அபிஷேக் என்ற 19 வயது இளைஞருக்கும் தூத்துக்குடி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு காதல் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி பழகி வந்துள்ளனர்.

இந்த நிலையில் தையல் பயிற்சி நிறுவனத்திற்கு வேலைக்கு செல்லும் சிறுமி கடந்த 22 ஆம் தேதி முதல் காணவில்லை என்று கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்த போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் ஓசூரில் தனி வீடு எடுத்து அங்கு தங்கி இருவரும் குடும்பம் நடத்தியது தெரியவந்தது. சிறுமியை மீட்ட போலீசார் இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்