சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூரில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறுமி காணாமல் போய்விட்டார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் திருவண்ணாமலையை சேர்ந்த விக்னேஷ்(19) என்பவர் உடன் சிறுமி தங்கியிருப்பது தெரியவந்தது. இதனால் போலீசார் சிறுமியை மீட்டு விக்னேஷை கைது செய்து எண்ணூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

அந்த விசாரணையில் விக்னேஷ் சிறுமியுடன் இன்ஸ்டாகிராமில் பழகியுள்ளார். பின்னர் இருவரும் காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு பெற்றோர் சம்மதிக்க மாட்டார்கள் என்பதால் விக்னேஷ் சிறுமியை திருவண்ணாமலைக்கு அழைத்து சென்று முருகன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டு வீட்டிலேயே தங்கி இருந்தது தெரியவந்தது. இதனால் விக்னேஷை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.