சென்னை மாவட்டத்தில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டை திருவெற்றியூர் நெடுஞ்சாலை எண்ணூரில் இருந்து வள்ளலார் நகர் வரை மாநகர பேருந்து இயக்கப்படுகிறது. நேற்று முன்தினம் அந்த பேருந்தில் தியாகராய கல்லூரி மாணவர்கள் 10-க்கும் மேற்பட்டவர்கள் மேற்கூரையில் ஏறி உள்ளனர். இதனையடுத்து “தியாகராஜா கல்லூரி ஜே; தியாகராய புளியங்கோவுக்கு ஜே” என முழக்கமிட்டு ரகளை செய்தனர். இதனை பார்த்ததும் டிரைவரும் கண்டக்டரும் மேற்கூரையில் இருந்து கீழே இறங்குமாறு கூறினர்.

ஆனால் மாணவர்கள் மேற்கூரையிலிருந்து இறங்க மறுத்து ஆபத்தான முறையில் பயணம் செய்தனர். சிறிது தூரம் பிறகு ஓட்டுநர் பேருந்தை நிறுத்திவிட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதனால் அச்சத்தில் கல்லூரி மாணவர்கள் பேருந்தில் இருந்து கீழே இறங்கி தப்பி சென்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.