சென்னை கலைவாணர் அரங்கில் இன்று  நவம்பர் 10ஆம் தேதி மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தின் இரண்டாம் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். உரிமைத்தொகை பெற மேல்முறையீடு செய்த 11.85 லட்சம் பேரில் தகுதியானவர்களுக்கும், ஏற்கனவே உரிமை தொகை பெறும் குடும்பத் தலைவிகளுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இன்று நவம்பர் 10ஆம் தேதி காலை 10 மணிக்கு மேல் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது.