தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1ஆம் தேதியை கணக்கிட்டு நான்கு சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இன்று 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களின் வங்கி கணக்கில் ஏற்கனவே வாங்கிய ஊதியத்துடன் ஜூலை மாதம் முதல் அக்டோபர் மாதங்களுக்கான நான்கு சதவீத ஊதிய உயர்வு செலுத்தப்படுகிறது. அதே சமயம் தீபாவளி போனது தனியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.