பராமரிப்பு பணிகள் காரணமாக 36 ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்று ஜூன் 25ஆம் தேதி முதல் ஜூலை மூன்றாம் தேதி வரை செயல்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இன்று ஜூன் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் மேட்சல் -செகந்தராபாத் இடையே இயக்கப்படும் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் கட்சிக்குடாவில் இருந்து ராய்ச்சூர், மகப்பூர் நகர் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கரீம் நகர் மற்றும் நிஜாமாபாத் ரயில்கள் ஜூன் 25 முதல் ஜூலை மூன்றாம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.