உத்தரபிரதேசம் மொராதாபாத்தில் 33 வயது கேஸ் வெல்டிங் பணியாளர் ஒருவர் அவரது தம்பியால் அடித்து கொலை செய்யப்பட்டார். வீட்டின் குளியலறையில் யார் முதலில் குளிப்பது என்பதில் ஆரம்பித்த வாக்குவாதமானது கொலை வரை சென்று உள்ளது. இத்தாக்குதலில் உயிரிழந்த ஃபக்கீர் உசேனின் மனைவி மற்றும் 3 மகள்களும் காயமடைந்து உள்ளனர்.

கொலைக்கு பின் 30 வயதான ஷதாப் போலீஸ் நிலையத்திற்கு சென்று, தன் சகோதரனை மரக்கட்டையால் அடித்து கொன்றதாக கூறி சரணடைந்துள்ளார். இதையடுத்து காவல் நிலைய அதிகாரிகள் அந்நபரை கைது செய்துள்ளனர். உயிரிழந்தவர் மற்றும் அவரது 5 சகோதரர்கள் ஒன்றாக அப்பகுதியிலுள்ள இரண்டு மாடி வீட்டில் வசித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.