ஒரு பிளே ஸ்கூலில் இருக்கும் குழந்தை அங்கிருக்கும் மற்றொரு குழந்தையை திரும்ப திரும்ப அடிக்கும் சிசிடிவி வீடியோவானது சில நாட்களாக இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் குழந்தைகளை கவனிக்க ஆளே இல்லாத அந்த வகுப்பறையில், 1 குழந்தை மற்றொரு குழந்தையை தொடர்ந்து அடித்தும், கடித்தும் வைப்பது சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக பெங்களூரு காவல்துறை உறுதியளித்து இருக்கிறது. அது பெங்களூருவின் சிக்கலசந்திராவிலுள்ள டெண்டர்ஃபுட் பிளே-ஸ்கூல் என்று குறிப்பிட்டுள்ளது. இது குறித்த வீடியோ வைரலாகி பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியது.