ஐபிஎல்-ன் 12வது போட்டியில் இன்று இரவு 7:30 மணிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை அணி எதிர்கொள்கிறது.இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடி ஒருமுறை வென்றுள்ள சென்னை இன்று மும்பை அணியை அதன் சொந்த மண்ணிலேயே வான்கடே மைதானத்தில் எதிர்கொள்கிறது. நடப்பு ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை அணி எதிர்கொள்ளும் முதல் போட்டி இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இழந்துள்ளது. இந்நிலையில் இந்த மைதானத்தின் இரண்டு கேலரிகளை நிதா அம்பானி முன்பதிவு செய்துள்ளார்.

அந்த கேலரியில் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். சிஎஸ்கே ரசிகர்களுக்கு அனுமதி இல்லை. கடந்த முறை சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் மோதி ஆட்டத்தில் சிஎஸ்கே ரசிகர்கள் அதிகம் இருந்தனர். இந்த முறை அப்படி நடந்து விடக்கூடாது என மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் இப்படி இறங்கியுள்ளது.