கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மண்டலம் மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படும் நிலையில் அப்போது பக்தர்களின் கூட்டம் அலைமோதும். இந்த வருடம் வழக்கத்தை விட பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்து வரும் நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை டிசம்பர் 27ஆம் தேதி இன்று காலை 10.30 மணி அளவில் நடைபெற உள்ளது.

இதனைத் தொடர்ந்து சன்னிதான கதவுகள் இன்று இரவு 11 மணிக்கு மூடப்படும். மகர விளக்கு பூஜைக்காக மீண்டும் டிசம்பர் 30ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். ஜனவரி 15ஆம் தேதி மாலை 6.36 மணிக்கு மகரவிளக்கு ஜோதி தரிசனம் நடைபெறும். அதன் பிறகு ஜனவரி 20ஆம் தேதி காலை 6.30 மணிக்கு மீண்டும் கோவில் நடை மூடப்படும் என தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.