சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ளது. சத்தீஸ்கரில் மொத்தம் 90 தொகுதிகள் உள்ள நிலையில் அங்கு முதல் கட்டமாக 20 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மிசோரம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் இன்று நடைபெறுகிறது. இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.