உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ஆர்.என். ரவி , பொன்முடிக்கு இன்று அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க இருக்கிறார். பொன்முடியின் குற்ற வழக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட போதிலும் அவரை அமைச்சராக்க முடியாது என்று ஆளுநர் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு சட்டம் தெரியுமா தெரியாதா என்று உச்ச நீதிமன்றம் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தது. இதனை தொடர்ந்து பொன்முடிக்கு அமைச்சராக ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.