‘மிக்ஜாம்’ புயல் சென்னையை புரட்டி போட்டுவிட்டது. இதனால் நேற்று பேருந்து, ரயில் உள்ளிட்ட பல சேவைகளும் நிறுத்தப்படடன. இந்நிலையில் கனமழை காரணமாக சென்னையில் நேற்று மெட்ரோ ரயில் சேவை ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்று வழக்கம் போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை நின்றுள்ளதால் சென்னையில் அனைத்து வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்படும். இந்த செய்தியால் மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.

சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ள காரணத்தால் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது தற்போது தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து இன்று முற்பகல் தெற்கு ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே பாபட்லாவிற்கு அருகே தீவிர புயலாக கடக்கிறது.