தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் 17ஆம் தேதி உடன் முடிவடைகிறது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்த முதல்வர் ஸ்டாலின் சென்னை திரும்பி உள்ளார். தொடர்ந்து இன்று திருவள்ளூர் மற்றும் வடசென்னை தொகுதிகளில் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். இதேபோல் இபிஎஸ்-சும் இன்று மத்திய மற்றும் தென் சென்னையில் வாஸ்து சேகரிக்கிறார்.