தமாகாவின் முன்னாள் எம்எல்ஏ மணிவர்மா (தண்டராம்பட்டு) கட்சியை சேர்ந்த 2500 பேர்களுடன் இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பாஜக உடலான கூட்டணியில் அவர்களுக்கு உடன்பாடு இல்லை என்பதால் கட்சியில் இருந்து விலகி முன்னாள் எம்எல்ஏ தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் ஐக்கியமாகியுள்ளார். இது பாஜக கூட்டணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.