5G சேவைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. 5G அன்லிமிடெட் சேவையை திரும்ப பெறுவதோடு 5G சேவைக்கு ஐந்து முதல் பத்து சதவீதம் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்க படலாம் என கூறப்படுகிறது. சோதனை அடிப்படையில் 4G கட்டணத்தில் 5G சேவைகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் இந்த விலை உயர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் என கூறப்பட்டுள்ள நிலையில் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.