இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வாட்ஸ் அப் பயன்படுத்தி வருகிறார்கள். இதற்கிடையில் பயனர்களுக்காக வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வப்போது புதுப்புது அப்டெட்டுகளை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில்  உலகளவில் அதிக பயனாளர்களை வைத்துள்ள வாட்ஸ் அப் நிறுவனம், இதுவரை வாட்ஸ் அப்பில் 15 பேர் மட்டுமே குரூப் கால் மூலம் பேசும் வசதி இருந்தது.

அதனை தற்போது மாற்றி, இன்னும் கூடுதலாக 32 பேர் வரையிலும் வாட்ஸ் அப் கால் பேசும்படியான புது அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. வருங்காலங்களில் இன்னும் புதிய அப்டேட்கள் வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.