செல்வமகள் சேமிப்பு திட்டம், பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்காக மத்திய அரசால் 2014-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழில் இந்த திட்டம், பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் இந்தியாவின் அனைத்து அஞ்சலகங்களிலும் அல்லது வங்கிகளில் கணக்கைத் தொடங்க முடியும். இந்த திட்டம், பெற்றோர்களுக்கு சிறந்த சேமிப்பு வாய்ப்பாக அமையிறது.

சில முக்கிய விதிகளின் அடிப்படையில் செயல்பட்டு வந்த இந்த திட்டத்தில், சமீபத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முதலில், இரண்டு பெண் குழந்தைகளுக்கு மட்டுமே கணக்கு தொடங்க முடியும் என்ற விதியில் தற்போது மாற்றம் செய்யப்பட்டு, மூன்றாவது பெண் குழந்தை  பிறந்தால் மூன்று குழந்தைகளுக்கும் கணக்குத் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதல் முதல் இரண்டு குழந்தைகள் இரட்டை குழந்தைகளாக பிறக்க வேண்டும். இதனால், அதிக பெற்றோர் தங்கள் குழந்தைகளின் எதிர்கால நிதி நிலையை பாதுகாக்கும் வகையில் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய முடியும்.

மேலும், சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தின் வரி மீண்டும் உயர்த்தப்பட உள்ளதால், ஜனவரி மாதம் முதல் புதிய வரி விதிப்பு அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றம் பெண் குழந்தைகளின் எதிர்கால நிதி நிலையை மேம்படுத்தும் ஒரு நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. வட்டி விகிதம் பற்றிய செய்தியும் இந்த மாற்றங்களுடன் சேர்த்து வெளிவந்துள்ளது. மாதம் 2,000 ரூபாய் முதலீடு செய்தால், 15 ஆண்டுகளில் வட்டி சேர்த்து ரூ.11.16 லட்சம் வரை தொகை கிடைக்கும் என்பதால், பெற்றோர்கள் இந்த திட்டத்தில் அதிக ஆர்வம் காட்டும் வாய்ப்பு அதிகம்.