தாய்மொழி ஆர்வலர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கல்வியின் தொடக்கத்தில் இருந்து கல்வி அறிவை உறுதி செய்வதற்காக கேரளா அரசு புதிய பள்ளி பாடத்திட்டத்தை அறிமுகம் செய்கின்றது. பள்ளி படிப்பின் அடிப்படை ஆண்டுகளில் தாய் மொழி புலமைக்கு முன்னுரிமை அளிப்பதற்கான குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. தாய்மொழி கல்விக்கு முக்கியத்துவம் வழங்கும் விதமாக மலையாளம் கட்டாய பாடமாக்கப்பட்டுள்ளது.

மேலும் குழந்தைகள் பள்ளியில் படிக்கும் முதல் ஆண்டு முடிவதற்கு முன்பாக தாய் மொழியில் எழுதவும் படிக்கவும் திறன் பெற்று இருக்க வேண்டும். வரும் கல்வியாண்டில் புதிய பாட புத்தகங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் இந்த அணுகு முறையில் ஒருங்கிணைந்த ஆசிரியர்களுக்கான பயிற்சி அடுத்த வாரம் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.