சிறை கைதிகளுக்கு வீடியோ கால் வசதி ஏற்படுத்தியும், தொலைபேசியில் பேசும் நேரத்தை அதிகரித்தும் சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சிறைத்துறை வெளியிட்ட அறிவிப்பில், சிறைவாசிகளின் மன அழுத்தத்தை குறைக்கவும் அவர்கள் தவறுகளை உணர்ந்து மேலும் குற்றங்களில் ஈடுபடுவதை தடுத்திடும் பொருட்டும், சிறைவாசிகள் தமது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், வழக்குரைஞர்கள் ஆகியோரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள தற்போது வழங்கப்பட்டு வரும் தொலைபேசி வசதிக்கான (ஆடியோ) கால அளவை 3 நாட்களுக்கு ஒரு முறை மாதத்திற்கு 10 முறை ஒரு அழைப்பிற்கு 12 நிமிடங்கள் என உயர்த்தி வழங்குவதோடு, காணொளி (வீடியோ) தொலைபேசி வசதியும் ஏற்படுத்தப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.