சிறப்பு தடுப்பூசி முகாம்கள் டிச.30ஆம் தேதி வரை நடைபெறும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி சிறப்பு முகாம் தொடங்கி வைக்கப்பட்டது. சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார மையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்களில் டிச.13ஆம் தேதி முதல் டிச.30ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக அமைச்சர் அறிவித்துள்ளார். 9 மாதம் தொடங்கி 15 வயது வரையான குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போடப்படுகிறது. இன்னும் 3 வாரங்களுக்கு இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்றார்.