இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வாட்ஸ் அப் பயன்படுத்தி வருகிறார்கள். இதற்கிடையில் பயனர்களுக்காக வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வப்போது புதுப்புது அப்டெட்டுகளை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் வாட்ஸ்அப் சேனல்கள் என்ற புதிய ஒளிபரப்பு அம்சத்தை மெட்டா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த அம்சம் இந்தியா மற்றும் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வாட்ஸ்அப் சேனல் ஆனது உங்களின் தனிப்பட்ட உரையாடல்களில் இருந்து தனியே பிரித்து வைக்கப்பட்டிருக்கும். நீங்கள் யாரை ஃபாலோ செய்கிறீர்கள் என்று மற்ற நபர்களுக்கு தெரியாது. இதில் சில முக்கிய அம்சங்கள் உள்ளன. ஒன்று நீங்கள் இருக்கும் இருப்பிடத்தின் அடிப்படையில் சேனல்கள் தானாக ஃபில்டர் செய்யப்பட்டு வழங்கப்படும். இதுபோன்ற பல வசதிகள் உள்ளன.