பேங்க் ஆப் பரோடா வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வரும் நிலையில் தற்போது புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. அதாவது தற்போது வரை நேரடியாக வங்கிகளுக்குச் சென்று கேஒய்சி செயல்முறையை முடிக்கும் முறை நடைமுறையில் இருந்த நிலையில் தற்போது வீடியோ கால் மூலமாக கேஒய்சி செயல்முறையை முடிக்கும் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய சேவை வங்கியின் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை வீடியோ கால் மூலமாக சரிபார்ப்பு செய்யப்படும் எனவும் இந்த சேவையை பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் பேங்க் ஆப் பரோடா இணையதளம் அல்லது செயலியில் வீடியோ re -kyc என்ற இணைப்பை கிளிக் செய்ய வேண்டும் என அறிவித்துள்ளது. அதன் பிறகு உங்களது கணக்கு எண் மற்றும் மொபைல் எண்ணை பதிவு செய்து ஓடிபி என்னை பதிவு செய்ய வேண்டும். பிறகு பேங்க் ஆப் பரோடா வங்கி ஊழியர்களுடன் இணைந்து வீடியோ கால் மூலமாக கேஒய்சி செயல்முறை சரிபார்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.