உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் எரிவாயு சிலிண்டர்களுக்கான மானியம் 100 ரூபாயாக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி இனி ஒரு எரிவாயு சிலிண்டரை முன்பதிவு செய்து பெறும் பொழுது மானிய தொகை 200 ரூபாய்க்கு பதிலாக 300 ரூபாய் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் இறுதிக்குள் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் 200 ரூபாயிலிருந்து தற்போது 300 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் இந்த திட்டத்தின் கீழ் சிலிண்டர் வாங்குவதற்கான மாநிலத்தை அதிகரித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் கோடிக்கணக்கான பெண்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.