தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் முனைவர் பட்டம் பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவி தொகை இனி மதம் மாறிய மாணவர்களுக்கும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் முனைவர் பட்டம் பயிலும் மாணவர்களின் ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான விண்ணப்பங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில் கிறிஸ்தவ மதம் மாறிய மாணவர்களும் இனி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.