ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தி.மு.க கூட்டணி சார்பாக காங்கிரஸ் வேட்பாளராக இ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இ.வி.கே.எஸ் இளங்கோவனை எதிர்த்து அ.தி.மு.க கூட்டணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் யார் என்ற பெயர் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் அ.தி.மு.க சார்பாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் 15 பேர் கொண்ட பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழ்மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி, தங்கமணி, துணை செயலாளர் கே.பி.முனுசாமி போன்ற முன்னாள் அமைச்சர்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தி.மு.க அமைத்த தேர்தல் பணி குழுவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு,  செந்தில் பாலாஜி, முத்துசாமி, சக்கரபாணி, நாசர், தங்கம் தென்னரசு போன்ற 31 பேர் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.