புதியதாக சேர்க்கப்பட்ட ஊழியர்களில் 425 நபர்களை சென்ற மாதம் பணிநீக்கம் செய்த விப்ரோ நிறுவனமானது, தற்போது அடுத்த அதிரடியை தொடங்கி உள்ளது. சுமார் 3 ஆயிரம் புது ஊழியர்களை 6 1/2 லட்சம் ரூபாய் ஆண்டு சம்பளத்துக்கு பணியமர்த்த வேலை உறுதி கடிதம் அனுப்பி இருந்தது. இந்நிலையில் அவர்களின் வருட சம்பளத்தை 3 1/2 லட்சம் ரூபாயாக குறைப்பதாக அறிவித்து உள்ளது. இதற்கு விருப்பம் இருப்பவர்கள் பணியில் சேரலாம் எனவும் விருப்பம் தெரிவிக்காதவர்கள் காத்திருக்கலாம் எனவும் கூறியுள்ளது.

உலகளவில் பொருளாதார சூழல் மாறி இருப்பதால இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக விப்ரோ தெரிவித்துள்ளது. 2022-23ல் இதுவரையிலும் மொத்தம் 17 ஆயிரம் பேரை பணியமர்த்தியுள்ள விப்ரோவில் 2.58 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். அதே நேரத்தில் டிசிஎஸ் நிறுவனம் ஆட்குறைப்பு எதுவும் செய்யப்போவதில்லை எனவும் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கப்போவதாகவும் அறிவித்துள்ளது.