மங்களூர் செல்லும் விரைவு ரயில் பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக வியாழக்கிழமை ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, கொல்கத்தாவின் சந்தரகாச்சியிலிருந்து மங்களூருக்கு வாரம் தோறும் விவேக் அதிவிரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் வியாழக்கிழமை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் மறு மார்க்கமாக மங்களூரில் இருந்து சனிக்கிழமை புறப்படும் அதை விவேக் அதிவிரைவு ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.