அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் 300 பயணிகளுடன் தில்லிக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஸ்வீடன்  ஸ்டாக்ஹோம் விமான நிலையத்திற்கு அந்த விமானம் திருப்பி விடப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு ஏர் இந்தியா விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளது.

இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் நலமுடன் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் விமானத்தின்  இன்ஜினில் ஆயில் கசிவு ஏற்பட்டதன் காரணமாக தரையிறக்கப்பட்டுள்ளது என விமான போக்குவரத்து இயக்குனரகம் கூறியுள்ளது.