உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பயனாளர்களுக்கு ஒரு புது வசதியை கொண்டுவந்துள்ளது வாட்ஸ்ஆப். அந்தவகையில் whatsapp நிறுவனம் தன்னுடைய பயனர்களுக்கு கூடுதலாக இரட்டிப்பு பாதுகாப்பு வழங்குவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது வாட்ஸ் அப் கால், மெசேஜ், வீடியோ, சாட் லாக் லாஸ்ட் சீன் என அனைத்து செயல்பாடுகளையுமே தனிச்சையாக பயனாளர்கள் மட்டுமே அறிந்து கொள்ளும்படியான பாதுகாப்பை வழங்கி உள்ளது. வாட்ஸ் அப் கணக்கை நான்கு ஊடகங்களில் லாக் இன் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் லாகின் செய்யும் முறையும் மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.