ஐபிஎல் போட்டியின் 41வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு 35 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாதை அதன் சொந்த மண்ணிலேயே நேற்று  வென்றது. இது குறித்து ஆர்சிபி அணியின் கேப்டன் டு பிளெஸ்ஸி பேசுகையில் , கடைசி 2 போட்டிகளில் தோல்வியுற்றாலும் அற்புதமான பதிலடியை கொடுத்தோம்.
ஆனாலும் குழுவாக நம்பிக்கையை பெற வெற்றி பெற்றாக வேண்டும். பொய்யான நம்பிக்கையை குழுவுக்கு அளிக்க முடியாது. இந்த மாதிரியான செயல்பாடுகளே நிஜமான நம்பிக்கையைத் தரும். இனி நிம்மதியாக தூங்குவோம் என்று அவர் நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.