மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ராஜ்யசபாவில் மூன்று  முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்துள்ளார். குற்றவியல் சட்டங்களில் மொத்தம் 313 மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது. குற்ற வழக்குகளில் தண்டனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அதாவது சிறார்களை பாலியல் வன்கொடுமை செய்தால் இனி மரண தண்டனை விதிக்கப்படும்.

இதனையடுத்து கூட்டு பலாத்கார வழக்குகளில் சிக்கும் குற்றவாளிகளுக்கு 20 வருடங்கள் சிறைத் தண்டனையும்  விதிக்கப்படும். இதற்கான சட்டத் திருத்தத்தை மக்களவையில் அமித்ஷா தாக்கல் செய்துள்ளார்.