தென்காசியில் ஈ.சி ஈஸ்வரன் பிள்ளை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் நடைபெற்ற நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதன் பிறகு சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை யாருக்கு ஒதுக்கப்படும் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அப்பாவு, சட்டசபையில் யாரை எங்க உட்கார வைக்க வேண்டும் என்பது சபாநாயகரின்‌ முடிவு. யாருக்கு எந்த இருக்கையை ஒதுக்க வேண்டும் என்பது என்னுடைய முழு விருப்பம். அது குறித்து அந்த நேரத்தில் முடிவு செய்து கொள்ளலாம் என்று கூறினார். மேலும் தகுதி வாய்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு 2023-ம் ஆண்டுக்குள் மாதந்தோறும் ரூ. 1000 வழங்கப்படும் என்றும் கூறினார்.