பள்ளிகளில் குழந்தைகளை அடிக்கக்கூடாது என்று ஏற்கனவே சட்டம் உள்ள நிலையில் அதை இன்னும் தீவிரப்படுத்துமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் குழந்தைகளை கண்காணிக்கலாம், கண்டிக்கலாம், ஆனால் அடிக்கக் கூடாது என கூறியுள்ள நீதிமன்றம், மாணவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கக்கூடாது என்ற குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய விதிகளை தீவிரமாக அமல்படுத்துமாறு தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.