வாகன ஓட்டிகள் நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும்பொழுது அவர்களுடைய வசதிக்காக மத்திய அரசாங்கம் புதிய திட்டத்தை தற்போது அறிமுகம் செய்துள்ளது. அதாவது நெடுஞ்சாலையில் பயணம் செய்யும்பொழுது வாகனங்கள் அவ்வப்போது சுங்கசாவடிகளில் நின்று செல்வதை தவிர்க்கும் விதமாகவும், வாகன ஓட்டிகளின் வசதியை மேம்படுத்தும் விதமாகவும் இனி சுங்க கட்டணம் செலுத்துவதற்காக வாகன ஓட்டிகள் சுங்க சாவடிகளில் காத்திருக்க வேண்டாம்.

அதாவது செயற்கைக்கோள் அடிப்படையிலான சுங்கக் கட்டணம் வசூல் செய்யும் நடைமுறை நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே செயல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். சுங்கச் சாவடிகளில் வாகனங்களின் காத்திருப்பு நேரத்தை குறைப்பதற்காக FASTag முறை அமலானது. இந்த நிலையில், வாகனங்கள் செல்லும் தூரத்தை செயற்கைக்கோள் மூலம் கண்காணித்து, அந்த தூரத்திற்கு தகுந்தாற்போல் இனி கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது