தமிழகத்தில் கிராமப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளிலும் காலை உணவு திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சிறுபான்மையினர் பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்ற மாணவிகளை புதுமைப்பெண் திட்டத்தில் சேர்ப்பதற்கும், கிறிஸ்தவர்களுக்கு கல்லறை தோட்டம், இஸ்லாமியர்களுக்கு கபர்ஸ்தான் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.