3 பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை தேர்வு செய்ய தான் அமைத்த தேடுதல் குழுவை திரும்பப் பெற்றார் ஆளுநர் ரவி.

பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் தேடுதல் குழுவை திரும்ப பெற்றார் ஆளுநர் ஆர்.என் ரவி. உச்ச நீதிமன்ற, உயர்நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் தேடுதல் குழுவை திரும்ப பெற்றார் ஆளுநர் ரவி.. தேடுதல் குழுவை நியமனம் செய்வதில் ஆளுநர் – தமிழக அரசு இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் பாதிக்காத வகையில் தமிழக அரசு நடவடிக்கை தேவை என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக மானிய குழு உறுப்பினருடன் தேடுதல் குழுவை தமிழக அரசு அமைக்கும் என நம்புகிறோம் என்றும், நீதிமன்றங்களின் தீர்ப்பு விவரங்களை சுட்டிக்காட்டி ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆளுநர் நியமித்த தேடுதல் குழுவுக்கு போட்டியாக தமிழக அரசும் குழுவை நியமித்ததால் சர்ச்சை ஆனது.