மகளிர் உரிமை தொகைக்கு மேல்முறையீடு செய்த தகுதியான பெண்களுக்கு இந்த மாதம் 25ஆம் தேதிக்கு மேல் எஸ்எம்எஸ் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மாதம் மேல்முறையீடு செய்த தகுதியானவர்களுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்காது. அடுத்த மாதம் அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 11 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ள நிலையில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.