தமிழகத்தில் பண்டிகை நாட்களில் ரேஷன் கடைகள் மூலம் பொது மக்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது. அதன்படி தற்போது தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு அரிசி, கோதுமை, இரண்டு கிலோ சர்க்கரை, துவரம் பருப்பு மற்றும் ஒரு லிட்டர் பாமாயில் ஆகியவற்ற இலவசமாக வழங்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.

இதற்காக தமிழகத்திற்கு 8,500 டன் கோதுமையை மத்திய அரசு வழங்க ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில் ரேஷன் கடைகளில் மக்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் இருப்பில் வைத்திருக்க வேண்டும் என கூட்டுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. பண்டிகை சமயத்திற்குள் மக்களுக்கு வேண்டிய பொருள்களை விநியோகம் செய்யும் வகையில் நவம்பர் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.