தமிழகத்தில் நாளை கன முதல் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும், குமரி, தென்காசி, நெல்லை, விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, அரியலூர், பெரம்பலூர், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.