தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விடுமுறை நாளான இன்று வழக்கம் போல ரேஷன் கடைகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டது. ரேஷன் கடைக்கு வரும் குடும்ப அட்டைதாரர்களுக்கு தரமான பொருட்களை மட்டுமே வழங்க வேண்டும் எனவும் தேவையில்லாத பொருட்களை வாங்க சொல்லி அவர்களை கட்டாயப்படுத்த கூடாது, அனைத்து பொருட்களையும் கையிருப்பு வைத்திருக்க வேண்டும் என ரேஷன் கடைகளுக்கு புதிய உத்தரவு பறந்துள்ளது.