இந்த பிரபஞ்சம் இருக்கும் வரை தேமுதிக என்ற கட்சியும் முரசு என்ற சின்னமும் இருக்கும் என்று மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், தேமுதிக 2.0- ஐ ராமேஸ்வரம் என்ற புனித தளத்திலிருந்து தொடங்கியுள்ளோம்.

நான் என்னுடைய தந்தையிடம் கேட்டது உங்களுடைய சொத்து வேண்டாம், நீங்கள் சம்பாதித்து வைத்த தொண்டர்கள் மட்டும் போதும் என்று கூறினேன். சில ஆண்டுகளாக தேமுதிக தோல்வி அடைந்தது என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். ராமநாதபுரத்தில் கட்சி தொய்வு அடைந்ததாகவும் கூறுகின்றனர். ஆனால் ராமநாதபுரத்தில் பார்த்த போது கேப்டன் புதைக்கப்பட்டு அல்ல விதைக்கப்பட்டுள்ளார், இதுதான் உண்மை என்று விஜய் பிரபாகரன் கூறியுள்ளார்.