மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் மூன்று கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இந்நிலையி இந்தியாவில் நடைபெறும் மக்களவைத் தேர்தலில், ஏ.ஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் சீனாவை சேர்ந்த ஹேக்கர்கள் தலையிட வாய்ப்புள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் எச்சரித்துள்ளது.

போலி சமூகவலைதளப் பக்கங்களை உருவாக்கி அதில் மீம்ஸ், வீடியோக்கள், ஆடியோக்கள் வெளியிட்டு, இந்திய வாக்காளர்களை திசை திருப்பும் செயலில், சீன ஹேக்கர்கள் ஈடுபடக் கூடும். எனவே, மிகுந்த கவனமுடன் செயல்படுமாறு மைக்ரோசாப்ட் அறிவுறுத்தியுள்ளது