இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்த மாதம் இறுதியில் நடைபெற உள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்தியாவின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த், இந்த டெஸ்ட் தொடரில்  இந்திய அணி வென்றால் அது உலக கோப்பைக்கு சமமான வெற்றியாக இருக்கும். அதனை நான் பார்க்க விரும்புகிறேன். ஏனென்றால் தென் ஆப்பிரிக்காவை அதனுடைய சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது  மிகவும் கடினமான ஒன்று என்று அவர் தெரிவித்துள்ளார்.