ஹரியானா மாநிலம் குருகிராமில், கேலரியா மார்க்கெட் பகுதியில் போக்குவரத்து காவல்துறையினர் சோதனை நடத்தி  கொண்டிருந்தனர். அப்போது, ஜப்பானிய பெண் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார். அவரை தடுத்து நிறுத்திய போலீசார் ஹெல்மெட் அணியாததற்காக 1000 ரூபாய் வாங்கியுள்ளனர். இந்த சம்பவத்தை அந்த பெண் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.

வீடியோவில், “வாவ்! குருகிராம் காவல்துறை ஒரு ஜப்பானிய சுற்றுலாப் பயணியிடம் ஆயிரம் ரூபாய் வாங்கிவிட்டது, அதுவும் ரசீது இல்லாமல். இப்படி அவர்கள் வெளிநாடுகளில் இந்தியாவின் பிம்பத்தைக் கெடுக்கின்றனர்,” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த பெண்ணுடன் ஸ்கூட்டரில் பின்னால் அமர்ந்திருந்த வேறொருவர் இந்த வீடியோவைப் பதிவு செய்திருக்கலாம். ஹெல்மெட் அணியாததற்காக அபராதம் என்ற பெயரில் ஆயிரம் ரூபாய் கேட்கப்பட்டு, பணம் வாங்கப்பட்ட பிறகு ரசீது வழங்கப்படவில்லை.

இந்த வீடியோ வைரலானதும், காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் செல்ல. உடனடியாக, போக்குவரத்து துணை ஆணையர் டாக்டர் ராஜேஷ் மோகன், மூன்று பேரை பணியிடைநீக்கம் செய்தார். அவர்களில் zone அதிகாரி கரண் சிங், கான்ஸ்டபிள் ஷுபம், மற்றும் ஹோம்கார்ட் பூபேந்தர் ஆகியோர் அடங்குவர். இந்த காணொளி தற்போது வைரலாகி வருகிறது.